6TH 3RD TERM - பண்டையக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
Ø சங்கம் எனும் சொல் எதனைக் குறிக்கிறது - மதுரை பாண்டிய அரசர்களின் காலத்தில் தமிழ் புலவர்களின் குழுமம்
Ø பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த மீட்டு பதிப்பித்து வெளியிட்டவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் யார் - ஆறுமுக நாவலர்(யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை(யாழ்ப்பாணம்), உ வே சாமிநாத ஐயர்
Ø ஹத்திக்கும்பா கல்வெட்டு யாருடையது - கலிங்க நாட்டு அரசன் காரவேலன்
Ø சங்க காலம் என அழைக்கப்படும் கால அளவு என்ன - கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
Ø சங்ககாலம் எந்த காலகட்டத்தை சார்ந்தது - இரும்புக் காலம்
Ø சங்க காலம் என்பது எந்த பண்பாட்டு காலத்தைச் சார்ந்தது - பெருங்கற்காலப் பண்பாடு
Ø தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கொண்டுள்ளவர் யார் - கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
Ø எந்த சேர அரசன் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்- சேரன் செங்குட்டுவன்
Ø எந்த அரசர் பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார் - சேரன் செங்குட்டுவன்
Ø சேர பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்த சோழ மன்னர் யார் - கரிகால சோழன்
Ø கரிகால சோழனால் காவிரியின் குறுக்கே கற்களால் கட்டப்பட்ட அணை எது – கல்லணை
Ø எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் 5 வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார் – நெடுஞ்செழியன்
Ø எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றது – பதிற்றுப்பத்து
Ø எந்தப் பதினெண்கீழ்க்கணக்கு நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விரிவான செய்திகளை வழங்குகின்றது – பட்டினப்பாலை
Ø கொற்கையின் தலைவன் என போற்றப்படுபவர் யார் – நெடுஞ்செழியன்
Ø பாண்டிய அரசர்களின் நாணயங்களில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது - ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்
Ø எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் - முதுகுடுமிப் பெருவழுதி
Ø சேர அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன - ஆதவன்,குட்டுவன்,வானவன் இரும்பொறை
Ø சோழ அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன - சென்னி,செம்பியன், கிள்ளி, வளவன்
Ø பாண்டிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன- மாறன், வழுதி, செழியன், தென்னர்
Ø அரசு அதிகாரத்தின் சின்னங்களாக கருதப்பட்டவை எவை - செங்கோல்,முரசு வெண்கொற்றக்குடை ஆகியவை
Ø சேரர்கள் என்ன மாலையை அணிந்தனர் – பனம்பூமாலை
Ø சேரர்களின் துறைமுகம் எது - முசிறி அல்லது தொண்டி
Ø சேரர்களின் தலைநகரம் எது - கரூர்/வஞ்சி
Ø சேரர்களின் சின்னம்- வில் அம்பு
Ø சோழர்கள் என்ன மாலையை அணிந்தனர் - அத்திப் பூ மாலை
Ø சோழர்களின் துறைமுக நகரம் – புகார்
Ø சோழர்களின் தலைநகர் - உறையூர் அல்லது புகார்
Ø சோழர்களின் சின்னம் – புலி
Ø பாண்டியர்கள் என்ன மாலையை அணிந்தனர் - வேப்பம்பூ மாலை
Ø பாண்டியர்களின் துறைமுக நகரம் – கொற்கை
Ø பாண்டியர்களின் தலைநகரம் – மதுரை
Ø பாண்டியர்களின் சின்னம் - இரண்டு மீன்கள்
Ø ஆய் என்னும் பெயர் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது - பழந்தமிழ் சொல்லான ஆயர் (பொருள்- ஆநிரை மேய்ப்போர்)
Ø சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் என்னென்ன - அந்திரன், திதியன்,நன்னன்
Ø கடை ஏழு வள்ளல்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் - பாரி, காரி, ஓரி, பேகன், ஆய் அதியமான், நள்ளி
Ø கிழார் என்பவர் யார் – கிராமத்தலைவர்
Ø அரசர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார் - 'கோன்' எனும் சொல்லின் சுருக்கமான கோ,வேந்தன்,மன்னன், கொற்றவன், இறைவன்
Ø அரசருக்கு பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது? முடிசூட்டுவிழா அல்லது அரசு கட்டிலேறுதல்
Ø இளவரசர் எவ்வாறு அழைக்கப்படுவார் – கோமகன்
Ø இளவரசருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - இளங்கோ,இளஞ்செழியன் இளஞ்சேரல்
Ø நிலவரி மூலம் பெறப்பட்ட வரிகள் / வருமானம் எவ்வாறு அழைக்கப்பட்டது – இறை
Ø அரசருடைய சபை எவ்வாறு அழைக்கப்பட்டது – அரசவை
Ø அரசர்களின் ஐந்து வித கடமைகளை என்னென்ன - கல்வி கற்பதை ஊக்குவிப்பது சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களை பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது
Ø அரசர்களுக்கு உதவிசெய்யும் குழுக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன – ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்
Ø அரசருடைய படை எத்தனை பிரிவுகளைக் கொண்டிருந்தது - காலாட்படை,குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை
Ø படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - தானைத் தலைவன்
Ø சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவதற்கு பெயரென்ன - தோமாரம்(எறியீட்டி)
Ø ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது - படைக் கொட்டில்
Ø தலைநகரில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது – அவை
Ø கிராமங்களில் தீர்ப்பு வழங்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன – மன்றங்கள்
Ø ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது - மண்டலம்
Ø நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம்,நாடு, கூற்றம், ஊர்,பேரூர்,சிற்றூர்,மூதூர்
Ø கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர் – பட்டினம்
Ø துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல் எது – புகார்
Ø சங்க காலத்தில் நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தது - ஐந்து திணைகள்
Ø மருத நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது - மென்புலம் (நன்செய்)
Ø நெய்தல்திணை தவிர மற்றவை எவ்வாறு அழைக்கப்பட்டன - வன்புலம் (புன்செய்)
Ø மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் – குறிஞ்சித்திணை
Ø குறிஞ்சி திணையின் தொழிலென்ன - வேட்டையாடுதல் /சேகரித்தல்
Ø குறிஞ்சித் திணையின் மக்கள் யார் - குறவர் குறத்தியர்
Ø குறிஞ்சித் திணையின் கடவுள் யார் – முருகன்
Ø காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் - முல்லை திணை
Ø முல்லைத் திணையின் தொழில் என்ன - ஆநிரை மேய்த்தல்
Ø முல்லைத் திணையின் மக்கள் யார் - ஆயர் ஆய்ச்சியர்
Ø முல்லைத்திணையின் கடவுள் யார் – மாயோன்
Ø வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் – மருதத்திணை
Ø மருதத் திணையின் தொழில் என்ன – வேளாண்மை
Ø மருதத் திணையின் மக்கள் யார் - உழவன் உழத்தியர்
Ø மருதத் திணையின் கடவுள் யார் – இந்திரன்
Ø கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் - நெய்தல் திணை
Ø நெய்தல் திணையின் தொழில் என்ன - மீன்பிடித்தல் /உப்பு உற்பத்தி
Ø நெய்தல் திணையின் மக்கள் யார் – பரதவர்
Ø நெய்தல் திணையின் கடவுள் யார் – வருணன்
Ø வறண்ட நிலம் எவ்வாறு அழைக்கப்படும் - பாலை திணை
Ø பாலைத் திணையின் தொழில் என்ன – வீரச்செயல்கள்
Ø பாலைத் திணையின் மக்கள் யார் - மறவர் மறத்தியர்
Ø பாலைத் திணையின் கடவுள் யார் – கொற்றவை
Ø சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர் - 40 பெண்புலவர்கள்
Ø சங்ககால பெண்பாற் புலவர்கள் யார் - அவ்வையார்,வெள்ளிவீதியார், காக்கைபாடினியார்,ஆதிமந்தியார்,பொன்முடியார்.
Ø சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார் - சேயோன் அல்லது முருகன்
Ø சங்ககாலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர்கள் யார் - சிவன்,மாயோன்(விஷ்ணு), இந்திரன், வருணன்,கொற்றவை
Ø போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது - வீரக்கல் அல்லது நடுகல்
Ø சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான துணி எவ்வாறு அழைக்கப்படுகிறது - கலிங்கம்
Ø எந்த அரசன் இசையின் ஏழு சுரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்) என அறியப்படுகிறார் - கரிகாலன்
Ø பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - பாணர்,விறலியர்
Ø சங்ககாலத்தில் முக்கியமான நகரங்களில் எத்தனை வகையான சந்தைகள் இருந்தன - இரண்டு: காலை நேர சந்தையான நாளங்காடி, மாலை நேர சந்தையான அல்லங்காடி
Ø எகிப்து அரசன் இரண்டாம்ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியின் உள்ளும் அடிவயிற்றிலும் எது அடைக்கப்பட்டிருந்தை கண்டனர் - கருமிளகுக்கதிர்
Ø எந்த ரோமப் பேரரசர் இந்திய வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார் - ஆரிலியன்
Ø மூத்த பிளினி எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரோம்நாடு
Ø முசிறியை " இந்தியாவின் முதல் பேரங்காடி" என குறிப்பிட்டுள்ளவர் யார் - இயற்கை வரலாறு எனும் நூலில் மூத்த பிளினி
Ø ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் எந்த கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது - அகஸ்டஸ்
Ø பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தமானது அலெக்சாண்ட்ரியாவினைச் சேர்ந்தவணிகர் ஒருவருக்கு முசிறியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது இது எந்த காலத்தைச் சார்ந்தது - கிமு இரண்டாம் நூற்றாண்டு
0 Comments