வளங்கள்
· மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
· பணமதிப்புள்ள வளங்கள் - பெட்ரோலியம்
· பணமதிப்பற்ற வளங்கள்- காற்று
· ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் காலமும் தொழில் நுட்பமும் ஆகும்
·
வளங்கள் மூன்று
வகைப்படும்.
·
இயற்கை வளங்கள் (முதல்நிலை
செயல்பாடு)
Ø எ.கா: காற்று, நீர், மண், கனிமங்கள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள்,
நுண்ணுயிரிகள், வேட்டையாடுதல் , காடுகள்
· உயிரியல் வளங்கள் - தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்
· உயிரற்ற வளங்கள் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
· கண்டறியப்பட்ட வளங்கள் - நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்
· மறைந்திருக்கும் வளங்கள்- வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் கடல் ஈஸ்ட்
· கடல் ஈஸ்ட்டானது நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.
· புதுப்பிக்கக்கூடிய வளங்கள் - காற்று, நீர், சூரிய ஒளி
· புதுப்பிக்க இயலா வளங்கள் - நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் கனிமங்கள்
· உள்ளூர் வளங்கள் - கனிமங்கள்.
· உலகளாவிய வளங்கள் - சூரிய ஒளி மற்றும் காற்று.
· தனிநபர் வளங்கள் - அடுக்குமாடிக் கட்டடங்கள்.
· சமூக வளங்கள் - பூங்கா.
· நாட்டு வளங்கள் – இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்.
வெப்ப மண்டலமழைக்காடுகள் “உலகின் பெரும்
மருந்தகம்”(world’s
largest pharmacy) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் தாவரங்களில் 25% தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும்.
(எ.கா) சின்கோனா.
· பன்னாட்டு வளங்கள் - திமிங்கலப் புனுகு
ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப்புனுகு ஆகும். ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை 63,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும். இது வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
·
மனிதனால் உருவாக்கப்பட்ட
வளங்கள்
(இரண்டாம்
நிலை
செயல்பாடுகள்)
- சர்க்கரை ஆலை, பாலங்கள், வீடுகள்,
சாலைகள்.
· மனித வளம் - மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.
· மூன்றாம் நிலை செயல்பாடுகள் -வங்கி, வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை
·
“வளங்கள்
மனிதனின்
பேராசைக்கு
அன்று, அவனது தேவைக்கு மட்டுமே” மகாத்மா காந்தி கூறுகிறார்.
· வளத்திட்டமிடுதல்- வளங்களை சரியாக பயன்படுத்துவது.
· வளங்களைப் பாதுகாத்தல்- வளத்தினைக் கவனமாகக் கையாளுதல்
· நிலையான வளர்ச்சி- வருங்காலத்தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்தல்.
· வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் (3RS). அவைகள், குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle)
0 Comments