7TH- STD தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
1. தமிழ்நாட்டில் கோவில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சி:
1. பல்லவர் காலம்
- கி.பி. 600 - 850
2. முற்கால சோழர்கள் காலம்
- கி.பி. 850 - 1100
3. பிற்கால சோழர்கள் காலம்
- கி.பி. 1100 - 1350
4. விஜயநகர / நாயக்கர் காலம்
- கி.பி. 1350 - 1600
5. நவீன காலம்
- கி.பி. 1600 க்கு பின்னர்
2. குடைவரை கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது யாருடைய காலம் – பல்லவர்.
3. குடைவரை கட்டிட கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் - மகேந்திர வர்மன்.
4. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் - மண்டகப்பட்டிலுள்ள குடைவரை கோவில்.
5. ஏழு கோவில்கள் என அழைக்கப்படும்கோவில் மகாபலிபுரம் கடற்கரை கோவில்கள் யாரால் எழுப்பபட்டவை- இரண்டாம் நரசிம்மவர்மன்.
6. ராஜசிம்மன் என்று அழைக்கப்படுபவர்- இரண்டாம் நரசிம்மவர்மன்.
7. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்- இரண்டாம் நரசிம்மவர்மன்.
8. காஞ்சிவைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்
9. தமிழ் திராவிட கோவில் கட்டிட கலை மரபிற்கு எ.கா: பஞ்ச பாண்டவ ரதங்கள்- மகாபலிபுரம்.
1. துரோபதி ரதம் 2. தர்மராஜ ரதம் 3. பீம ரதம்
4. அர்ச்சுன ரதம் 5. சகாதேவ ரதம்
10. அர்ச்சுனன் தவம் இருக்கும் கருங்கல் பாறை- நீளம்-100 அடி - உயரம் - 45 அடி.
11. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு – 1984.
12. பல்லவர்களின் சமகாலத்தவர் - முற்கால பாண்டியர்கள்.
13. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிக சிறந்த எ.கா : கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில்.
14. கருவறையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ளது- துவாரபாலகர் சிலைகள்.
15. பாண்டியர் கட்டடக்கலையின் சிறப்பம்சங்கள்- பாறை குடைவரைக் கோயில்,கட்டுமானக் கோயில்.
16. பாண்டியர் கட்டிடக்கலைக்கு எ.கா: மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
17. முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் உள்ள இடங்கள்:
1. சித்தன்னவாசல் – புதுக்கோட்டை.
2. திருமலைபுரம் – திருநெல்வேலி.
18. சோழர்களின் கோவில் கட்டிடக்கலைக்கு எ.கா: தாதாபுரத்தில் உள்ள கோவில். திண்டிவனம்.
19. முற்கால சோழர்களின் கோவில் கட்டிட கலை பின்பற்றிய பாணி - செம்பியன் மகாதேவி பாணி.
20. செம்பியன் மகாதேவி பாணியில் அமைந்த கோவிலுக்கு எ.கா: திருப்புறம்பியத்தில் உள்ள கோவில்.
21. தஞ்சை பெரிய கோயிலின் விமானம் உயரம் -216 அடி.
22. உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று- தஞ்சை பெரிய கோவில்.
23. தஞ்சை பெரிய கோவில் மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் இதன் சிகரம் - தட்சிணமேரு என்று அழைக்கப்படுகிறது.
24. தஞ்சை பெரிய கோவில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்ட- நந்தியின் சிலை 16 அடி நீளம் 13 அடி உயரம் .
25. சோழர்களின் தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் எத்தனை ஆண்டுகள் விளங்கியது – 250.
26. பிரகதீஸ்வரர் கோவிலை கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டியவர் - இராஜேந்திர சோழன் - கோவிலின் உயரம் - 55 மீட்டர்.
27. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் - இரண்டாம் ராஜராஜன்.
28. விஜயநகர காலத்தில் கோவில்களில் கட்டப்பட்ட கல்யாண மண்டபங்களுக்கு எ.கா:
1. காஞ்சிபுரம் - வரதராஜ பெருமாள் கோவில்.
2. வேலூர் - ஜலகண்டேஸ்வரர் கோவில்.
3. மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
29. கோவில்களுக்கான நுழைவுவாயில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் - விஜயநகர காலத்தில் கட்டப்பட்டன.
30. இராமேஸ்வரம் கோவில் பிரகாரங்கள்:
1. வெளிப்பிரகாரம் - 7 மீட்டர் உயரம்.
2. கிழக்கு , மேற்கு பிரகாரங்கள் - 120 மீட்டர் நீளம்.
3. வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் - 195 மீட்டர் நீளம்.
31. விஜயநகர கால- புடைப்புச் சிற்பங்கள்:
1. திருநெல்வேலி - திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில்.
2. திருவரங்கம் - ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ணா கோவில்.
3. ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் கோவிலில் உள்ள தெற்குவிழா மண்டபம்
4. திருநெல்வேலி -நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையில் அமைந்துள்ள புகுமுக மண்டபம்.
32. விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படும் இடங்கள :
1. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
2. மதுரை கூடல் அழகர் கோவில்
3. திருவில்லிபுத்தூர்
4. திருவெள்ளரை
5. அழகர் கோவில்
6. திருவண்ணாமலை
7. திருவரங்கம்
33. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ள கோவில் - இராமேஸ்வரம் கோவில்.
34. தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் - கடற்கரை கோவில்.
35. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோ அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு – 1984.
36. முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் – விமானங்கள்.
37. அழகிய நம்பி கோவில் எங்கு உள்ளது - திருக்குறுங்குடி திருநெல்வேலி.
38. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன் முதலாக கட்டப்பட்ட குடைவரைக் கோவில் உள்ள இடம்- மண்டகப்பட்டு
39. முற்கால சோழர் கட்டடக்கலை பின்பற்றிய பாணி - செம்பியன் மகாதேவி.
40. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் - புது மண்டபம் .
41. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் - மண்டபங்கள்.
42. கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுனன் தவமிருக்கும் காட்சி .
43. பான்டியர்கள் கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது - மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
44. பிள்ளையார்பட்டியிலுள்ள குகை கோவில் பிற்காலப் பாண்டியரின் பங்களிப்பு.
45. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
46. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்- இராஜசிம்மன்.
47. முற்காலப் பாண்டியர் சமகாலத்தவர் - பிற்காலச் பல்லவர்கள்.
48. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாக திகழ்வது - குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள்.
49. பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் - ராஜேந்திர சோழன்.
50. பொருத்துக:
1. பல்லவர்கள்
- பாறை சிற்பங்கள் படைப்பது.
2. முற்கால சோழர்கள்
- விமானங்களுக்கு பெயர் பெற்றது.
3. பிற்கால சோழர்கள்
- கோபுரங்களுக்கு புகழ்பெற்றது.
4. விஜயநகர காலம்
- மண்டபங்களுக்கு புகழ் பெற்றது.
5. நவீன காலம்
- பிரகாரங்களுக்கு புகழ் பெற்றது.
0 Comments